தண்ணீர் நெருக்கடியால் ஏற்படும் அச்சம் ! | Veritas Tamil

சமீபத்திய ஏவுகணை தாக்குதல்கள் கடல் நீரை குடிநீராக மாற்றும் உப்பு நீக்க நிலையங்கள் (Desalination plants) போரின் குறிவட்டத்தில் சிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளன.
– நாதன் மோர்லி

மத்திய கிழக்கு போரால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்கனவே உருவாகியுள்ளது. ஆனால் இப்போது அது வளைகுடா நாடுகளில் தண்ணீர் அவசரநிலையையும் உருவாக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

எரிபொருளுக்குப் பிறகு, தண்ணீர் முக்கியமான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலக்காக மாறியுள்ளது.

நாதன் மோர்லியின் அறிக்கையை கேளுங்கள்.

சமீபத்தில் வளைகுடா நாடுகளுக்கு அருகிலுள்ள தொழிற்சாலை பகுதிகள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், உப்பு நீக்க நிலையங்கள் போரின் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளன.

ஐ.நா. மேற்காசிய பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் தகவலின்படி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள ஆறு நாடுகளில் சுமார் 4 கோடி மக்கள் குடிநீருக்காக உப்பு நீக்கப்பட்ட நீரையே சார்ந்துள்ளனர்.

மத்திய கிழக்கு உலகின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றாகும். இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக உப்பு நீக்குதல் மிக அவசியமானது.

எரிசக்தி நிலையங்கள் தாக்கப்படுமானால், தொடர்ந்து மின்சாரம் தேவையான உப்பு நீக்க நிலையங்கள் உடனடியாக செயலிழக்கும் என்ற அச்சம் உள்ளது.மேலும், நீண்ட நேர மின்தடை ஏற்பட்டால், நாட்கள் அல்ல — சில மணி நேரங்களிலேயே கோடிக்கணக்கான மக்கள் குடிநீரை இழக்க நேரிடலாம்.

இறுதியாக,ஒரு கவலை என்னவென்றால், கட்டமைப்புகள் சேதமடைவது, எண்ணெய் கசிவு அல்லது இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வளைகுடா கடல் நீர் மாசுபட்டால், அதே கடல் நீரை நேரடியாகப் பயன்படுத்தும் உப்பு நீக்க நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.