இன்றும், நமது பிறர் அன்பு பணிதான் இயேசுவின் சீடத்துவத்தை பெருகச் செய்யும். கிறிஸதுவத்தில் பணி வாழ்வும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதவை. எளிமையும் சேவையும் திருஅவையின் இரு கண்கள். மாறாக, இன்று நம்மில் பெரும்பாலோர், தனிமனித ஆசைகளையும் தேவைகளையும் மட்டுமே முன்னிறுத்தி பெருமைகொள்ளும் பண்பாட்டில் மூழ்கியுள்ளனர். கிறிஸ்துவின் ஆன்மாவை நாம் நாளுக்கு நாள் இழந்துவருகிறோம் என்றால் மிகையாகாது.