ஈஸ்டர் நமக்கு தளராத நம்பிக்கையைத் அளிக்கிறது - திருத்தந்தை கருத்து ! | Veritas Tamil

ஈஸ்டர் நம்பிக்கையின் செய்தி எப்போதும் எளிதாக ஏற்கப்படாது என்று திருத்தந்தை கூறினார். மரணத்தின் சக்தி உள்ளிலும் வெளிப்புறமும் எப்போதும் நம்மை அச்சுறுத்துகிறது.

உள்ளார்ந்த முறையில், நமது பாவங்களின் சுமை “சிறகுகளை விரித்து பறக்க விடாமல்” தடுக்கிறது; துன்பங்கள் நம்மை நம்பிக்கையிழக்கச் செய்து “முடிவில்லா சுரங்கத்தில் சிக்கியதாக” உணரச் செய்கின்றன.

வெளிப்புறத்தில், அநீதி, சுயநலம், ஏழைகளின் ஒடுக்கம், பலவீனர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றில் மரணம் தினமும் நம்முன் நிற்கிறது. உலகின் வன்முறை, பலவீனர்களை நசுக்கும் அத்துமீறல்கள், லாப பேராசை பூமியின் வளங்களை சுரண்டும் நிலை, போர்களின் அழிவு ஆகியவை இதற்கு சாட்சியாக உள்ளன.

“கண்களை உயர்த்தி இதயங்களைத் திறக்க ஈஸ்டர் நம்மை அழைக்கிறது; ஆண்டவர் உயிரோடு இருந்து நம்முடன் இருக்கிறார்” என்று திருத்தந்தை கூறினார்.

“உயிர்த்தெழுதலின் ஒளி இருளில் திறக்கும் போது, மரணத்தின் சக்தி நமது வாழ்க்கையின் இறுதி இலக்கு அல்ல என்பதை நமக்கு நம்பிக்கையாக அளிக்கிறது. கிறிஸ்துவில் நாமும் உயிர்த்தெழுந்துள்ளோம்.”

உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமக்கு உறுதியான நம்பிக்கையை அளிக்கிறார். உயிர்த்தெழுதல் “மரணத்தைவிட வலிமையான புதிய வாழ்வு மனிதகுலத்திற்கு உதயமாகிறது” என்று அறிவிக்கிறது.

இறுதியா,இந்த நம்பிக்கைப் பாடல் இன்று உலகிற்கு அவசியம். மரியா மக்தலேனா போல நாம் ஓடி, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை உலகுக்கு அறிவிப்போம்; மரணத்தின் நிழல் நிற்கும் இடமெல்லாம் வாழ்வின் ஒளி பிரகாசிக்கட்டும்.”