‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
“என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்”
கடவுள் ஒருபோதும் அநீதியானவர் என்று குற்றம் சாட்ட முடியாது. ஆனாலும், கடவுளின் இரக்கமும தாராள மனப்பான்மையும் சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிறது. கடவுள் சிலரை நம்மை விட மேலாக நடத்துவது போல் தெரிகிறது.
உலகம் நமக்கு உயர்த்திக்காட்டும் பொய்யான தெய்வங்களான செல்வம், புகழ், அதிகாரம் அல்லது சுய இன்பங்கள் என எதுவாக இருந்தாலும், நாம் அவற்றை அடைய விழைக்கிறோம்.
புதிய வானமும் புதிய பூமியும் படைக்கப்படும் இந்த மாட்சிமிகு நாளை எதிர்பார்த்து, விசுவாசிகள் அனைவரும் கடவுளுடன் என்றென்றும் உயிர்த்தெழுந்த நிலையில், அன்னையுடன் ஒன்றாக இணைந்திருப்பர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பாவமற்ற உடல் இவ்வுலகில் அழிவுறாது.
நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி கடவுளிடம் திரும்புவதற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக இருப்பது நமது தற்பெருமை. பலருக்கு வழிதவறிச் சென்றதை ஒப்புக்கொள்வது கடினம்தான். அவ்வாறே, நாம் செய்ததை ஏற்றுக்கொண்டு, கடவுளிடம் அவரது மன்னிப்பு மற்றும் இரக்கத்திற்காக திரும்புவதும் கடினம்தான்.
பேதுரு தனது அச்சத்தையும், குழப்பத்தையும், போராட்டங்களையும் தாண்டி, இயேசுவின் மீது தனது முழு நம்பிக்கையையும் வைக்க, இந்த தனிப்பட்ட அவரது வல்ல செயலின் (மீனில் நாணயம் காணுதல்) அருள் அவருக்குத் தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார்.
அன்பு நிறைந்த தியாகமே நம்மை காத்துநிற்கும். இத்தகைய அன்பு கலந்து தியாகமே நமக்கான அழைப்பு. ஆகவே, தன்னலம் துறப்பது மட்டுமல்ல, நமது சிலுவையான துன்பத் துயரங்களை நாமே சுமக்க வேண்டும். அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதல்ல.
இன்று இந்த மலையில் இயேசு தம் மாட்சியை வெளிபடுத்துகிறார். இந்த மாட்சி தந்தை தம் மகனுக்கு உரியதாக்கிய மாட்சி. இன்னும் சிறிது காலத்தில் அவரது இகழ்ச்சியை கல்வாரி மலையில் வெளிப்படுத்தவுள்ளார். இந்த இகழச்சி மனுக்குலம் அவருக்குச்சூட்டிய மணிமகுடமாக அமையும்.
கீழே பார்க்காதீர்கள், கடவுளை நோக்கிப் பாருங்கள். நமது புயல்களான பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பார்க்காதீர்கள், மாறாக இயேசுவின் மீது கவனம் செலுத்துவோம். இயேசுவின் மீது மட்டுமே நம் கண்களைப் பதிய வைப்போம்.
இந்த ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே வல்ல செயலாகும். ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது, இயேசு இந்த அற்புதத்தைச் செய்வதற்கு பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு விடுதலைப் பயணத்தின் போது, பாலைநில உணவளிப்பு நிகழ்வை வலுவாக எதிரொலிக்கிறது.